நசரத்பேட்டை
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நசரத்பேட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தின் நசரத்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 47.43 மீ. உயரத்தில், (13.0472°N 80.0802°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நசரத்பேட்டை அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், நசரத்பேட்டை ஊரின் மொத்த மக்கள்தொகை 8,660 பேர் ஆகும். இதில் 4,343 பேர் ஆண்கள் மற்றும் 4,317 பேர் பெண்கள் ஆவர்.[4]
சமயம்
இந்துக் கோயில்
காசிவிசுவநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று நசரத்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[5]
அரசியல்
நசரத்பேட்டை பகுதியானது, பூந்தமல்லி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads