நரந்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நரந்தம் வாசனை திரவியங்களுக்காகவம், அதன் சுவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் நரந்தங்காயை ஊறுகாயாக செய்து சாப்பிடுகின்றனர்.

Remove ads
சங்க காலம்
இதன் மலர் பற்றிய செய்திகள் சங்கப்பாடல்களில் உள்ளன.
- சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகத் தொகுக்கப்பட்டுள்ள 99 மலர்களில் நரந்தமலரும் ஒன்று.[2]
- சங்ககாலப் புலவர் நக்கீரர் இதனை ‘நரந்த நறும்பூ’ எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கலை என்னும் ஆண்குரங்கு துள்ளி விளையாடும்போது நறுமணம் மிக்க நரந்த மலர்கள் புலிபோல் பூத்துக் குலூங்கும் வேங்கை மலர்களோடு சேர்ந்து உதிருமாம்.[3]
- சோலையில் பூத்துக் குலுங்கும்.[4]
- காடெல்லாம் வண்டு மொய்க்கப் பூத்துக் குலுங்கும்.[5]
- நரந்தம் பூவைக் கோதையாகக் கட்டி, யாழின்மேல் சுற்றிவைப்பார்களாம்.[6]
- நரந்தம் என்பது மணத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட பொருள்களில் ஒன்று.[7]
- அதியமான் நரந்தம் மணக்கும் தன் கையால் புலவு நாறும் தன்னுடைய கூந்தலைக் கோதிவிட்டான் என ஔவையார் கூறுகிறார்.[8]
- நரந்தத்தை அரைத்துக் கூந்தலில் பூசிக்கொள்வர்.[9][10][11]
- இமயமலைச் சாரலில் கவிர் என்னும் முருக்கம்பூ பூத்துக்கிடக்கும் காட்டில் உறங்கும் கவரிமான் நரந்தம் மேயக் கனவு காணுமாம்.[12]
- புகார் நகரத்து மலர்வனத்தில் பூத்திருந்த மலர்களில் ஒன்று நரந்தம்.[13]
- நரந்த மணம் வீசும் கூந்தல்.[14]
Remove ads
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads