நாகூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகூர் (Nagore) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். காரைக்காலுக்கு தெற்கே சுமார் 12 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு வடக்கே 5 கி.மீ தொலைவிலும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் நாகூர் அமைந்துள்ளது. காரைக்கால், திருவாரூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகியன அருகிலுள்ள நகரங்கள் ஆகும். நாகூரில் சுமார் 39,000 மக்கள் வசிக்கின்றனர். நாகூர் தர்கா நகரத்தின் ஒரு முக்கிய ஈர்ப்பாகும். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இசுலாமிய ஆலயமான நாகூர் தர்கா, சாதி, மதம் அல்லது இன வேறுபாடின்றி மில்லியன் கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கிறது.[1][2] இந்தியாவிலேயே இசுலாமிய மக்களின் மிகப்பெரிய புனித தலமாக விளங்குகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads