நாய்க்கனேரி ஊராட்சி
இது தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாய்க்கனேரி ஊராட்சி (Naickaneri Gram Panchayat), தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3674 ஆகும். இவர்களில் பெண்கள் 1817 பேரும் ஆண்கள் 1857 பேரும் உள்ளனர்.
Remove ads
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]
Remove ads
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:
- காமனுர்தட்டு
- பனங்காட்டேரி
- பெரியூர
- புது ஏரியூர்
- சீக்கஜொனை
- முள்ளுகொல்லை
- மேலூர்
- புது காட்டுக்கொல்லை
- மேல்கொல்லை
- மேல் சோளக்கொல்லை
- நடுவூர்
- பள்ளக்கொல்லை
- கொல்லை மேடு
- நாய்க்கனேரி
- காசங்குட்டை முல்லை
2021 ஊரக உள்ளாட்சித் தேர்தல்
மலைப்பகுதியான நாய்யக்கேரி ஊராட்சியில் மலைவாழ் பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 2021-ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாய்க்கனேரி ஊராட்சித் தலைவர் பதவியை தலித் பெண்களுக்கு, மாநில தேர்தல் ஆனையம ஒதுக்கீடு செய்யதுள்ளது. இதனை எதிர்த்து பட்டியல் பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் நாய்க்கனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு இந்துமதி என்ற ஒரே ஒரு தலித் பெண் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.[7] .[8]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads