நா. அசோக்குமார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேராவூரணி நா. அசோக்குமார் அல்லது நா. அசோக்குமார் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுசட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் வீரியங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வி.நாராயணசாமி (தந்தை) மற்றும் நா. ஜெயம் (அம்மா) ஆகியோருக்கு 1957ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி பிறந்தவர். தமிழ்நாட்டின் தேவக்கோட்டையில் உள்ள பிரிட்டோ பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார்.
அரசியல் வாழ்க்கை
1975ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியில் சேர்ந்ததன் மூலம் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் பேராவூரணி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads