பகவல்பூர் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பகவல்பூர் இராச்சியம் (Bahawalpur state (Urdu: بہاولپُور) இந்தியப் பிரிவினைக்கு முன்னர் வரை பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் பகவல்பூர் மாவட்டம் மற்றும் ரகீம் யார் கான் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் பகவல்பூர் நகரம் ஆகும். 1941-ஆம் ஆண்டில் பகவல்பூர் இராச்சியம் 45,911 சதுர கிலோ மீட்டர் (17,494 sq மைல்) பரப்பளவும், மக்கள் தொகை 13,41,209 ஆகவும் இருந்தது. பகவல்பூர் இராச்சியத்தை 1609-ஆம் ஆண்டில் நிறுவியவர் நவாப் பகவல் கான் அப்பாசி ஆவார்.


Remove ads
வரலாறு
முகலாயப் பேரரசு மற்றும் துராணிப் பேரரசில் சிற்றரசாக இருந்த பகவல்பூர் இராச்சியம், 1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 22 பிப்ரவரி 1858 அன்று பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பகவல்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். பகவல்பூர் இராச்சியம் பஞ்சாப் மாகாண ஆளுநரின் கீழ் செயல்பட்டது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள், பகவல்பூர் நவாப்புக்கு 19 துப்பாக்கி குண்டுகள் சுட்டு மரியாதை வழங்கினர்.[1]
1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், 14 அக்டோபர் 1955 அன்று பகவல்பூர் இராச்சியம், பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
Remove ads
ஆடசியாளர்கள்

Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads