பல்மைரேனிய இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பல்மைரேனிய இராச்சியம் (Palmyrene Empire) கிபி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமானிய பேரரசின் படைத்தலைவர்கள், உரோமைப் பேரரசை மூன்றாகப் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அதில் ஒரு உரோம படைத்தலைவர், பல்மைராவை தலைநகராகக் கொண்டு, தற்கால துருக்கி, சிரியா, லெபனான், ஜோர்டான், பாலஸ்தீனம், இசுரேல் மற்றும் எகிப்து நாடுகளை கிபி 267 முதல் 273 முடிய குறுகிய காலம் ஆண்டனர்.
Remove ads
பின்னணி
கிபி 235ல் உரோமைப் பேரரசர் அலெக்சாந்தர் செவரசின் இறப்பிற்குப் பின்,[2] உரோமப் படைத்தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக உரோமப் பேரரசை கட்டுப்படுத்தினர். [3] உரோமைப் பேரரசின் எல்லைப்புறப் பகுதிகள் கவணிக்கப்படாததல், வெளிநாட்டினர் உரோமைப் பேரரசின் மீது தொடர் தாக்குதல் தொடுத்தனர்.[4][5]பேரரசின் கிழக்குப் பகுதிகளை, பாரசீகத்தின் சசானியர்கள் தாக்கினர்.[6]கிபி 260ல் சசானியர்கள் உரோமப் பேரரசின் அனதோலியா பகுதிகளை தாக்கினர்[7] பல்மைராவின் உரோமானியப் படைத்தலைவர் ஒடானியனதுஸ் தன்னை தானே பல்மரேனியாவின் மன்னராக அறிவித்துக் கொண்டார்.[8]
ஒடானியனதுஸ் தன்னுடைய ஆட்சி காலத்தை பாரசீகர்களுடன் போரிடுவதிலே கழித்தார்.[9][10][11] கிபி 271ல் உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியான அனதோலியா மற்றும் லெவண்ட் பகுதிகளுக்கு ஆளுநராக ஒடானியனதுஸ் நியமிக்கப்பட்டார். [12] [13] பின்னர் கிபி 271ல் ஒடானியனதுஸ் தன்னைத் தானே மன்னர்களின் மன்னராக அறிவித்துக் கொண்டார்.[7][14] [15]|group=note}}[12] பின்னர் ஒடானியனதுஸ் மற்றும் அவரது மகன் ஹைரன் படுகொலை செய்யப்பட்டனர்.[12] பின்னர் சிறிது காலத்திற்கு மேனியஸ் என்பவர் பல்மைரைனியா நாட்டிற்கு மன்னராக இருந்தார். அவரும் தம் படைவீரர்களால் கொல்லப்பட்டார். [16][17][18]
ஒடானியனதுசுக்குப் பின்னர் அவரது வயதிற்கு வராத பத்து வயது மகன் ஜெனொபியா பல்மைரேனியா மன்னராக முடிசூட்டப்பட்டார். வயதிற்கு வராத மன்னரின் பிரதிநிதியாக அவரது தாய் நாட்டை ஆண்டார். [19] [19][20] [19]
Remove ads
உரோமானியரகள் மீண்டும் கப்பற்றல்


கிபி 273ல் உரோமைப் பேரரசின் படைகள், பல்மைரேனியாவைக் கைப்பற்றி, மீண்டும் உரோமைப் பேரரசுடன் இணைத்தனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads