பழங்காநத்தம்
மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பழங்காநத்தம் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாநகராட்சியின் பகுதிகளுள் ஒன்றாகும். இது மதுரையின் தென்பகுதியில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் முன்பு புறநகர் பேருந்து நிலையம் ஒன்று இயங்கி வந்தது. மாட்டுத்தாவணியில் பேருந்து நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு தமிழகத்தின் தென்பகுதி மற்றும் கேரளத்திற்கு செல்லும் பேருந்துகள் பழங்காநத்தம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன.[1] தற்போது நகர பேருந்து நிறுத்தம் மட்டும் உள்ளது.
கண்ணகியின் கணவன் கோவலனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட, கோவலன் பொட்டல் இப்பகுதியில் அமைந்துள்ளது.[2]
Remove ads
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads