பாரம் தூக்குதல்
விளையாட்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரம் தூக்குதல் எவ்வளவு கூடிய நிறையை ஒருவர் தூக்க முடியும் என்று பார்க்கும் ஒரு விளையாட்டாகும். இது ஒலிம்பிக் விளையாட்டு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள் போன்ற நிகழ்வுகளில் விளையாடப்படுகிறது. விளையாட்டு வீரர் நிறைதகடுகள் பூட்டப்பட்ட கம்பத்தை குலுக்காமல் வீரயமாக சில நிமிடங்கள் தூக்கி காட்ட வேண்டும். வெவ்வேறு நிறை உடைய வீரர்கள் வெவ்வேறு வகுப்பு போட்டிகளில் பங்குபற்றுவர்.

Remove ads
வரலாறு
இன்றைய நவீன பளு தூக்குதல் விளையாட்டு 19 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய போட்டிகளில் பிறந்ததாகும். 1896 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலில் இந்த பாரம் தூக்குதல் போட்டி விளையாடப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒரு கையில் பளு தூக்குபவர்களுக்கும் இரண்டு கையில் பளு தூக்குபவர்களுக்கும் தனிப் பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.
1950 இலிருந்து இது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் விளையாடப்பட்டு வருகிறது. பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இது ஒரு முக்கிய விளையாட்டாக உள்ளது. முதல் ஆண் உலக சாம்பியன் 1891 இல் முடிசூட்டப்பட்டார்.
Remove ads
இந்தியர்களின் பதக்கங்கள்
- இந்தியாவைச் சேர்ந்த கர்னம் மல்லேஸ்வரி 2000 சிட்னி ஒலிம்பிக் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார்.
- 2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பாரம் தூக்குதல் – ஆடவர் 77 கிலோ போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றார்.
ஆண்மை பறிபோகும்
முறையான ஆசான்கள் இல்லாமல் தங்கள் போக்கிற்கு எடையை தூக்குவதனால் ஆண்மை பறிபோகும் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது[மேற்கோள் தேவை].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
