பார்சுவநாதர்

From Wikipedia, the free encyclopedia

பார்சுவநாதர்
Remove ads

பார்சுவநாதர் அல்லது பார்ஸ்வ (Parshvanatha அல்லது Pārśvanātha அல்லது Pārśva), மகாவீர்ருக்கு முந்தைய சமண சமயத்தின் 23ஆவது தீர்த்தங்கரர் ஆவார்.[1][2] இவர் பொ.ஊ.மு. 877-777-ஆம் ஆண்டில் வாழ்ந்த சமண சமயத் தலைவர்.[3][4][5] பகவான் பார்சுவநாதர், இச்வாகு குலத்தில், காசி நாட்டு அரசன் அஸ்வசேனா–ராணி வாமா தேவிக்கு வாரணாசியில் பிறந்தவர்.[6] முப்பது வயதில் உலக இன்பத்தை துறந்து துறவி ஆனார்.[7] பார்சுவநாதர் தொடர்ந்து 84 நாட்கள் கடும் தவம் இயற்றி ஞானம் அடைந்தார்.[8] தனது 100ஆவது அகவையில் முக்தி அடைந்தார். சமணர்களால் மிகவும் போற்றத்தக்கவராயிருந்தார்.[9][10]

Thumb
தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் சிற்பம், திரக்கோயில்
Thumb
லிண்டன் அருங்காட்சியகத்தில் பார்சுவநாதரின் சிற்பம்
Remove ads

படக்காட்சியகம்

மேலும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads