பிராக்ஜோதிச நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிராக்ஜோதிச நாடு (Pragjyotisha Kingdom) பண்டைய பரத கண்டத்தின் கிழக்கில் அமைந்த மகாபாரத இதிகாச கால நாடுகளில் ஒன்றாகும். குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்ட இந்நாட்டின் மன்னர் பகதத்தன் ஆவார். வரலாற்று காலத்தில் இந்நாட்டை காமரூபம் என்றும்; தற்காலத்தில் அசாம் என்றும் அழைக்கப்படுகிறது.
மகாபாரத குறிப்புகள்
- தருமனின் இராசசூய வேள்வியின் போது, திறை வசூலிக்க படையுடன் சென்ற அருச்சுனன், பிராக்ஜோதிச நாட்டின் மன்னர் பகதத்தனை வென்றார்.[1]
- தருமர் செய்த இராசசூய வேள்வியில் கலந்து கொண்ட மன்னர்கள் பட்டியலில் பிராக்ஜோதிச நாட்டின் மன்னர் பகதத்தன் பெயர் உள்ளது. (மகாபாரதம் 2, 33) - (2, 50).
- குருச்சேத்திரப் போரில் கௌரவர் அணியின் சார்பாக பிராக்ஜோதிச நாட்டின் மன்னர் பகதத்தன் யாணைப்படைத் தலைவராக போரிட்டார்.[2][3]
- குருச்சேத்திரப் போரில் பகதத்தன் அருச்சுனனால் கொல்லப்பட்டார்.
வச்சிரதத்தன்
குருச்சேத்திரப் போருக்குப் பின்னர், பிராக்ஜோதிச நாட்டு மன்னராக பகதத்தனின் மகன் வஜ்ஜிரதத்தன் ஆட்சிக்கு வந்தார். தருமரின் அஸ்வமேத வேள்விக்கான திறையைப் பெற, அருச்சுனன் வஜ்ஜிரதத்தனை வென்றான். (14, 75)
நரகாசுரன்
பிராக்ஜோதிச நாட்டை ஆண்ட நரகாசூரனை, கிருட்டிணன் வென்றார். (5, 48) மற்றும் (12, 339)
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads