புனித நீராடும் விழா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

புனித நீராடும் விழா (புஷ்கரம்) என்பது இந்தியாவில் கொண்டாடப்படுகின்ற, ஆற்றை வணங்குகின்ற விழாவாகும்.

புஷ்கரம்

புஷ்கரம் என்ற சொல்லுக்கு தீர்த்தமாடுதல் என்று பொருள் கூறப்படுகிறது. புஷ்கரணி என்றால் தீர்த்த கட்டம் ஆகும். அதாவது அது குளியலுக்கான சாதாரண படித்துறை அல்ல. அதைவிடப் புனிதமான ஆன்மிக தீர்த்தமாடும் தலமாகக் கருதப்படுகிறது.[1]

குரு

இவ்விழா இந்தியாவின் 12 பெரிய ஆறுகளில் கொண்டாடப்படுகிறது. மூத்தோர் வழிபாடு, ஆன்மீகச் சொற்பொழிவுகள், பண்பாட்டு நிகழ்வுகள் போன்றவை இவ்விழாவின்போது நடத்தப்படுகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஆற்றிலும் நடத்தப்பெறுகிறது. ஒவ்வொரு ஆறும் ஒவ்வொரு ராசியுடன் தொடர்புடையதாகும். குரு இருக்கும் இடத்தினைப் பொறுத்து, தொடர்புடைய ஆற்றில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. [2]

தொன்னம்பிக்கை

ஜாதக பாரிஜாதா (1426) என்ற நூலில் இது தொடர்பான ஒரு கதை கூறப்படுகிறது. கடுமையான தவத்தை மேற்கொண்ட பிராமணர் ஒருவருக்கு சிவன் ஒரு வரம் அளித்தார். அதன்படி அவரால் தண்ணீரில் வாழவும், புனித நீரை சுத்தமாக்கவும் முடியும். அந்த பிராமணர் புஷ்கரா என்றழைக்கப்பட்டார். குருவின் வேண்டுகோளின்படி அவர் 12 புனித ஆறுகளில் ஒன்றில் இருக்க முடிவெடுத்தார்.[3]

ஆறுகள்

ஒவ்வொரு ஆறும் ஒவ்வொரு ராசியுடன் தொடர்புடைய நிலையில் அந்தந்த ஆண்டிற்கான விழா குரு இருக்கும் நேரத்தைப் பொறுத்துக் கொண்டாடப்படுகிறது.[4] சில சமயங்களில் குரு ஒரே ராசியில் ஆண்டில் இரு முறை வரவும் வாய்ப்புள்ளது. அவ்வாறான காலக்ளில் குருவின் இரண்டாவது கால நுழைவென்பது விழாவின் முதல் பகுதியாக அமைக்கப்படுகிறது.[5]

புஷ்கரம் எனப்படுகின்ற மரபு பற்றி ஆரம்ப கால இந்து சமய இலக்கியங்களில் கூறப்படவில்லை. இடைக்காலத்தில் இம்மரபு வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தந்த பகுதிகளின் பழக்கவழக்கங்களுகேற்ப 12 ஆறுகளின் பெயர்களும் அவ்வப்போது மாறும்.[2][3]

Remove ads

இந்தியாவில் புஷ்கரங்கள்

இந்தியாவில் ராசியின் அடிப்படையிலும், நதிகளின் அடிப்படையிலும் புஷ்கரங்கள் 12 இடங்களில் கொண்டாடப்படுகின்றன.[6] [7]

மேலதிகத் தகவல்கள் ராசி, நதி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads