பெரியநாயக்கன்பாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரியநாயக்கன்பாளையம் (ஆங்கிலம்:Periyanaickenpalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி ஜோதிபுரம், கஸ்தூரிபாளையம், குப்பச்சிபாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் என நான்கு வருவாய் கிராமங்கள் கொண்டது.

Remove ads
அமைவிடம்
இப்பேரூராட்சி, கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு பெரியநாயக்கன்பாளையம் தொடருந்து நிலையம் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
9.37 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 206 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,377 வீடுகளும், 25,930 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
மேலும் பார்க்க
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads