பேரையூர்
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேரையூர் (ஆங்கிலம்:Peraiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Remove ads
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9.72°N 77.8°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 150 மீட்டர் (492 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,394 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,292 ஆண்கள், 5,102 பெண்கள் ஆவார்கள். பேரையூரில் 1000 ஆண்களுக்கு 964 பெண்கள் உள்ளனர். பேரையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79.98% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87.09%, பெண்களின் கல்வியறிவு 72.77% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று குறைவானதே. பேரையூர் மக்கள் தொகையில் 1,078 (10.37%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 800 பெண்கள் என்று குறைந்துள்ளது.
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.33% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 13.41% கிருஸ்துவர்கள் 1.08%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். பேரையூர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 11.33%, பழங்குடியினர் 0.11% ஆக உள்ளனர். பேரையூரில் 2,796 வீடுகள் உள்ளன.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads