மகாத்மா காந்தி சேது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாத்மா காந்தி சேது (Mahatma Gandhi Setu) என்பது ஒரு பாலம் ஆகும். இது கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது மேலும் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவையும் பீகாரின் வடபுறம் உள்ள ஹஜிபூரையும் கங்கை ஆற்றின் குறுக்கே சென்று இணைக்கின்றது.
அதன் நீளம் 5575 மீட்டர் (18,291 அடி) ஆகும்.[1] இது உலகின் மிக நீளமான பாலங்களில் ஒன்றாக உள்ளது.[2] இந்த பாலத்தில் 48 தூண்கள் உள்ளன. இது அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் 1982, மே அன்று தொடங்கப்பட்டது.
Remove ads
கட்டிடக்கலை
இந்த பாலம் கேமன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்த பாலம் 46 தூண்களைக் கொண்டுள்ளது. இதன் தாங்கி 7.5 மீட்டர் (25 அடி) அகலத்தில் இரு வழிச்சாலை மற்றும் இருபுறமும் நடைபாதகளை கொண்டுள்ளது. இது கொடுங்கை பால வகையாகும். 65 கோடி ரூபாயில் இது கட்டப்பட்டது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads