மாத்தறைக் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாத்தறைக் கோட்டை (Matara Fort) 1595 இல் போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, பின் காலி கைப்பற்றப்பட்ட பிறகு ஒல்லாந்தரால் 1640 இல் மீளவும் கட்டப்பட்டது. இக்கோட்டை பெரிய கற்சுவர்களைக் கொண்டு கட்டப்பட்டதோடு, நிலவை கங்கையையும் கடலையும் பிரிக்கும் நிலக்கூம்பையும் கொண்டு கட்டப்பட்டது.
போர்த்துக்கேயர் முதலாவது அரணை 1595 இல்[1] கோட்டை இராச்சிய ஆட்சியாளர் தர்மபாலாவின் உதவியுடன் கட்டினர்.[2] போர்த்துக்கேயரிடமிருந்து 1640 இல் ஒல்லாந்தர் மாத்தறையைக் கைப்பற்றினர்.[3] தற்போதுள்ள அரணை 1645 இல் கட்டினர்.[2] இக்கோட்டை 240 m (790 அடி) நீளமும், 13 m (43 அடி) கனமும், 5 m (16 அடி) உயரம் கொண்டு, உள்ளூர் சுண்ணக்கற்கள், கருங்கற்கள், பவளப்பாறை கொண்டு கட்டப்பட்டது.[1][3]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads