மானி சமயம்

From Wikipedia, the free encyclopedia

மானி சமயம்
Remove ads

மானி சமயம் (Manichaeism) (/ˌmænɪˈkɪzəm/;[1]தற்கால பாரசீக மொழியில் آیین مانی Āyin-e Māni; சீனம்: ; பின்யின்: Jiào) சாசானியப் பேரரசில், பாரசீகரான மானி என்பவர், கிபி மூன்றாம் நூற்றாண்டில் துவக்கத்தில் இச்சமயத்தை நிறுவினார்.[2][3][4]

Thumb
பாரசீக பேரரசில் மானி சமயச் சின்னத்தின் படம்
Thumb
நட்சத்திரகளுடன் கூடிய மானி சமயக் கோயிலின் வரைபடம்
Thumb
மானி சமயத்தை நிறுவிய மானி
Thumb
கிபி 300 - 500 வரை மானி சமயம் பரவிய பகுதிகள்

நன்மை, தீமைகளால் சூழ்ந்த இவ்வுலகத்தின் மதிப்பு கோட்பாடு , நன்மை மற்றும் தீமை ஆகியவற்றிற்கும் இடையேயான போராட்டங்கள், ஆன்மிக ஒளிக்கும், இருளுக்கும் உள்ள வேறுபாடு, லோகாதய பொருட்களால் ஆன இருள் சூழ்ந்த உலகம் ஆகியவற்றை மானி சமயம் கூறுகிறது.[5]

அரமேயம் பேசிய பகுதிகளில் மானி சமயம் வேகமாக பரவியது. [6] மானி சமயம் கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது. மானி சமய வழிபாட்டுத் தலங்கள், சாத்திரங்கள், தூரக் கிழக்கில் சீனாவிலும், மேற்கில் உரோமைப் பேரரசிலும் காணப்படுகிறது.[7] இசுலாம் பரவுதற்கு முன்னர், மானி சமயத்தின் பெரும் எதிரி கிறித்தவம் ஆகும். கிபி 14-ஆம் நூற்றாண்டில் மானி சமயம், தென் சீனாவில் நலிவடைந்து மறைந்தது.[8]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads