மெகர் பாபா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெகர் பாபா (Meher Baba :பிறப்பு மெர்வான் ஷெரியார் இரானி ; 25 பிப்ரவரி 1894– 31 ஜனவரி 1969) ஓர் இந்திய ஆன்மீக குரு ஆவார், இவர் தன்னை அவதாரம் அல்லது மனித வடிவத்தில் உள்ள கடவுள் என்று கூறினார். [1] [2] [3] 20 ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கிய ஆன்மீக நபர்,[4] [5] இவரை நூறாயிரக்கணக்கான மக்கள் பின்தொடர்ந்தனர், இதில் பெரும்பான்மைஅயான மக்கள் இந்தியாவிலும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் கணிசமான எண்ணிக்கையிலும் இருந்தனர். [6] [7]
19 வயதில், மெஹர் பாபா ஏழு வருட ஆன்மீக பயணத்தினைத் தொடங்கினார். அந்தப் பயணத்தின் போது அசுரத் பாபாஜன், உபாஸ்னி மகராஜ், சீரடியின் சாய்பாபா, தாஜுதீன் பாபா மற்றும் நாராயண் மஹராஜ் ஆகியோரைச் சந்தித்தார். 1925 ஆம் ஆண்டில், இவர் 44 ஆண்டுகால மௌன விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார், அந்தச் சமயத்தின் போது முதலில் ஒரு எழுத்துப் பலகையைப் பயன்படுத்தியும், 1954 வாக்கில், மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்தி கை சைகைகள் மூலமாகவும் தொடர்பு கொண்டார். [8] இவர் 1969 இல் இறந்தார், மேலும் மெஹராபாத்தில் அடக்கம் செய்யப்பட்டார். "பாபா காதலர்கள்" என்று அழைக்கப்படும் இவரது சமாதி இவரைப் பின்பற்றுபவர்களுக்கு புனித யாத்திரை இடமாக மாறியுள்ளது. [9]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads