மேலகரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேலகரம் (ஆங்கிலம்:Melagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]
Remove ads
அமைவிடம்
மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான தென்காசியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், குற்றாலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், இலஞ்சியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
6.56 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேலகரம் பேரூராட்சி 5,884 வீடுகளும், 14,535 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
புகழ்பெற்றவர்கள்
- திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதிய திரிகூடராசப்பக் கவிராயர்
- திருவாடுதுறை ஆதின அதிபர் - சுப்பிரமணிய தேசிகர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads