மொடக்குறிச்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொடக்குறிச்சி (ஆங்கிலம்:Modakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மொடக்குறிச்சி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
அமைவிடம்
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு வடக்கில் 17 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 28 கி.மீ.; மேற்கில் பெருந்துறை 26 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
11.78 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 68 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,076 வீடுகளும், 9,907 மக்கள்தொகையும் கொண்டது. [5]
புகழ்பெற்றவர்கள்
- சுப்புலெட்சுமி ஜெகதீசன், 1977 மற்றும் 1996 ஆண்டுகளில் மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வென்றவர். இவர் 1977 - 80 ஆம் ஆண்டுகளில் எம். ஜி. ஆர். அமைச்சரவையில் இடம் பெற்றார். பின்னர் தி.மு.க.வில் சேர்ந்து, 1989-இல் மு. கருணாநிதி அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads