மோகன் யாதவ்
மத்தியப்பிரதேச முதலமைச்சர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோகன் யாதவ் (Mohan Yadav) ஓர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். யாதவ், உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜைன் தக்ஷின் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளார்.[2][3][4]
Remove ads
அரசியல் வாழ்க்கை
யாதவ் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் உஜ்ஜைன் தக்ஷின் தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2018 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், இவர் மீண்டும் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உஜ்ஜைன் தக்ஷின் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தொடர்ந்தார்.
2 சூலை 2020 அன்று யாதவ் சிறீ சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் மாநில அமைச்சராகப் பதவியேற்றார்.[5]
Remove ads
முதல்வராக
திசம்பர் 11, 2023 அன்று பாஜக இவரை மத்தியப் பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சராக அறிவித்தது. மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் இவரது பெயரை மத்தியப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற கட்சி அங்கீகரித்தது. மோகன் யாதவ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் இருந்து வந்தவர். இவர் உஜ்ஜைன் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாக அண்மையில் நடைபெற்ற 2023 மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தேர்வானார். முன்னர் இவர் சிவராஜ் சிங் சௌகான் அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்சராக இருந்தார்.
13 டிசம்பர் 2023 அன்று முதலமைச்சராக மோகன் யாதவ் மற்றும் துணை முதலமைச்சர்களாக ஜெகதீஷ் தேவ்தா மற்றும் இராஜேந்திர சுக்லா ஆகியோர் பதவி ஏற்றனர்.[6][7] சட்டமன்றத் தலைவராக நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டார்.
Remove ads
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads