இரத்தினகிரி மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரத்தினகிரி மாவட்டம் (மராத்தி: रत्नागिरी जिल्हा) மேற்கு இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின் 35 மாவட்டங்களில் ஒன்றாகும். இரத்தினகிரி இந்த மாவட்டத்தின் தலைநகரமாகும். மாவட்டத்தில் 11.33% நகரியப் பகுதிகளாகும்.[1] மேற்கே அரபிக்கடலும் தெற்கே சிந்துதுர்க் மாவட்டமும் வடக்கே ராய்கட் மாவட்டமும் கிழக்கே சாங்க்லி, கோலாப்பூர், சதாரா மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. இது கொங்கண் மண்டலத்தின் பகுதியாக உள்ளது. இங்கு இரத்தினகிரி கோட்டை உள்ளது.
Remove ads
மக்கள்தொகை ஆய்வு
இந்த மாவட்ட மக்கள் கொங்கணி மொழி|கொங்கணி, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர். பெரும்பாலோனோரின் தாய்மொழியாக கொங்கணி உள்ளது.
பாரத ரத்னா விருது பெற்ற மூவர் இந்த மாவட்டத்திலிருந்து வந்துள்ளனர்:
- முனைவர். தோண்டோ கேசவ் கார்வே (1858-1962) - 1958ஆம் ஆண்டு
- முனைவர். பாண்டுரங்க் வாமன் கானே (1880-1972) - 1963ஆம் ஆண்டு
- முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) - 1990ஆம் ஆண்டு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads