ராஜசேகர் (நடிகர்)
தமிழ் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜசேகர் (19 ஆகத்து 1957 – 8 செப்டெம்பர் 2019) ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், திரைப்பட, சின்னத்திரை நடிகரும் ஆவார். அத்துடன் திரைக்கதை எழுத்தாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2]
ஒளிப்பதிவாளர்
ராஜசேகர் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து ஒளிப்பதிவு பயிற்சி பெற்றார். உடன் பயின்ற இராபர்ட் ஆசீர்வாதம் என்பவருடன் இணைந்து ஜெயபாரதியின் இயக்கத்தில் 1979 இல் வெளிவந்த குடிசை திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார்.
இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்த திரைப்படங்கள்:
இயக்குநர்
பின்னர் இராபர்ட்டுடன் இணைந்து சுஹாசினி நடிப்பில் 1981 இல் வெளிவந்த பாலைவனச்சோலை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியளித்தது.[1][2]
இருவரும் இணைந்து இயக்கிய திரைப்படங்கள்:
- பாலைவனச்சோலை (1981)
- கல்யாணக் காலம் (1982)
- தூரம் அதிகமில்லை (1983)
- புதிய சரித்திரம்
- பறவைகள் பலவிதம்
- சின்னபூவே மெல்லபேசு (1987)
- மனசுக்குள் மத்தாப்பூ (1988)
- தூரத்துப் பச்சை
திரைக்கதை எழுத்தாளர்
- வேலும் மயிலும் துணை (1979), திரைக்கதை
- சின்னபூவே மெல்லபேசு (1987), திரைக்கதை
- மனசுக்குள் மத்தாப்பூ (1988), திரைக்கதை, வசனம்
- பார்வைகள் பலவிதம் (1988), வசனம்
- பாலைவனச் சோலை, திரைக்கதை
நடிகர்
- நிழல்கள் (1980)
- தமிழன்
- நரசிம்மா
சின்னத்திரை நடிகர்
- சரவணன் மீனாட்சி
- தென்றல்
தனிப்பட்ட வாழ்க்கை
மனசுக்குள் மத்தாப்பூ படத்தில் டாக்டர் கீதா என்ற பாத்திரத்தில் நடித்த சரண்யாவை மணந்துகொண்டார். அந்த மணவாழ்வு நீடிக்காமல் மணமுறிவு ஏற்பட்டது. பின்னர் தாரா என்பவரை மணந்து தன் இறுதி காலம்வரை அவருடன் வாழ்ந்தார்.[3] சில நாட்களாக உடல் நலக் குறைபாட்டால், சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் 2019 செப்டம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.[1][2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads