ருத்ரா (நடிகை)
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசுவினி அல்லது அசுவினி நம்பியார் என்றும் அழைக்கப்படும் ருத்ரா, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார்.[1] இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ருத்ரா. இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த கெளரவர் என்ற மலையாளத் திரைப்படத்தில் சிறீதேவி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். மணிச்சித்ரதாழ் (1993), கிழக்குச் சீமையிலே (1993), துருவம் (1993), பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு (1994), குடும்பக் கோடதி (1996) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
அசுவினி தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும் போது, ஒரு மலையாளப் பத்திரிக்கைக்காக, தனது வகுப்பு தோழர்களுடன் ஆடை விளம்பரங்களில் தோன்றினார். பத்திரிகையைப் விளம்பத்தை பார்த்த இயக்குநர் பாரதிராஜா புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பளித்தார். திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூர் சென்ற இவர் தற்போது சிங்கப்பூரில் தொடர் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார்.
தொழில்
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் ருத்ரா தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.[1] இவர் சுமார் 16 மலையாளப் திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிச்சித்ரதாழ் (1993) திரைப்படத்தில் அல்லி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஹிட்லர் (1997) என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவியின் சகோதரியாக நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
தொலைக்காட்சித் தொடர்கள்
தமிழ்
மலையாளம்
தெலுங்கு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads