வடக்கு கிழக்கு மாகாண சபை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்கு கிழக்கு மாகாணசபை என்பது இலங்கையின் முன்னாள் அரசியல் நிர்வாக அலகுகளுள் ஒன்றாகும். இது இலங்கையின் மாகாண அலகுகளாக இருந்த வட்டக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை நிர்வகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட நிர்வாக சபையாகும். இது 1987 ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988 இல் நடைபெற்ற மாகாணசபைக்கான பொதுத்தேர்தலைத்தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது.[1][2][3]
தற்போது இலங்கையின் ஆரசியல் மாற்றங்களால், இம்மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறுவதில்லை. தேரதல்கள் இன்றி ஆளுநருக்கு கீழான, மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இது கொண்டுவரப்பட்டுள்ளது. இம்மாகாணசபைகள் இப்போது கொழும்பு மேல் நீதிமன்ற உத்தரவிற்கமைய பிரிக்கப்பட்டு வடக்கு மாகாணசபையானது கன்னியாப் பகுதியில் இயங்கிவருகின்றது, திருகோணமலையில் உள்ள இரண்டு மாகாணசபைகளும் வெவ்வெறிடத்தில் இருப்பதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
Remove ads
வடகிழக்கு இணைப்பு ரத்து தீர்ப்பு
1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய, ஒன்றாக்கப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் செல்லுபடியாகாது என இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்தத் தீர்ப்பு வடகிழக்கு இணைப்பை ரத்து செய்கின்றது. "வடக்கு கிழக்கின் இணைப்பானது கிழக்கு மாகாண மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாகக் கூறித் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இத் தீர்ப்பில், கிழக்கு மாகாணத்துக்குத் தனியானதொரு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது."
Remove ads
வெளி இணைப்புகள்
- வடக்கு கிழக்கு மாகாணசபை பரணிடப்பட்டது 2006-02-18 at the வந்தவழி இயந்திரம் அதிகாரப் பூர்வத்தளம் (ஆங்கில மொழியில்)
- வடகிழக்கு இணைப்பு ரத்து
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads