வந்தவாசி நகராட்சி
தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வந்தவாசி நகராட்சி (Vandavasi Municipality) திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சி 24 வார்டுகளைக் கொண்டது.[3] இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 32 கி.மீ. தொலைவில் உள்ள மேல்மருவத்தூரில் உள்ளது. திருவண்ணாமலை இங்கிருந்து 77 கி.மீ. தொலைவில் உள்ளது.
இவ்வூரின் அமைவிடம் 12.5°N 79.62°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 74 மீட்டர் (242 அடி) உயரத்தில் இருக்கின்றது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,326 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 31,320 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.5% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3337ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,242 மற்றும் 410 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 60.86%, இசுலாமியர்கள் 34.73%, கிறித்தவர்கள் 3.03%, தமிழ்ச் சமணர்கள் 1.28% மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர். [தொடர்பிழந்த இணைப்பு]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads