வைரிசெட்டிபாளையம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வைரிசெட்டிபாளையம் (Vairichettipalayam) என்பது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், துறையூர் வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை ஊராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்
வைரிசெட்டிபாளையம் ஊரானது மாவட்ட தலைநகரான திருச்சிராப்பள்ளியிலிருந்து 67 கிலோமீட்டர் தொலைவிலும், துறையூரிலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 321 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இதனருகே கொல்லிமலை தொடர்ச்சி அமைந்துள்ளது.
மக்கள் வகைபாடு
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 2073 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7113 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3550 (49.9 %) என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3593 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 71.0 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
கோயில்கள்

- வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயில் - இக்கோயிலில் மாசிபெரியசாமியும் எண்ணற்ற கிராம தேவதைகளும் தனி தனி சந்நிதிகளாக உள்ளனர்.
- வைரிசெட்டிபாளையம் பெரியண்ண சுவாமி கோயில்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads