வ. நல்லையா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வல்லிபுரம் நல்லையா (Vallipuram Nalliah, 10 செப்டம்பர் 1909 - 27 டிசம்பர் 1976) இலங்கைத் தமிழ் ஆசிரியரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
நல்லையா 1909 அக்டோபர் 9 இல்[1] மட்டக்களப்பு, புளியந்தீவு என்ற கிராமத்தில் பிறந்தவர். புனித மிக்கேல் கல்லூரியில் படித்து, லண்டன் மெற்ரிக்குலேசன் கலைப் பட்டதாரி ஆனார். மகரகமை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்சி பெற்ற ஆசிரியரானார்.[2] 1929இல் சிவானந்தா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த நல்லையா,1937இல் அப்பாடசாலையின் பிரதி அதிபரானார்.[3] பின்னர் அட்டாளச்சேனை ஆண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தலைமை ஆசிரியரானார். தங்கரத்தினம் முத்தையா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[2] மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.[2]
Remove ads
அரசியலில்
நல்லையா 1943 ஆம் ஆண்டில் திருகோணமலை-மட்டக்களப்புத் தொகுதிக்கு இடம்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசாங்க சபைக்குத் தெரிவானார்.[2] 1947 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக கல்குடா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] பின்னர் டொன் ஸ்டீபன் சேனாநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதனை அடுத்து அவர் சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2] 1952 தேர்தலில் ஐதேக வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[5] இவர் சிறிது காலம் டட்லி சேனாநாயக்கவின் அமைச்சரவையில் அஞ்சல், தொடர்புத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார்.[6]
1956 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[7] 1960 மார்ச் தேர்தலிலும் தோல்வியடைந்தார்.[8] பின்னர் இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக 1965 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார்.[9]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads