1971 இந்தியப் பொதுத் தேர்தல்

இந்தியாவில் பொதுத் தேர்தல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியக் குடியரசின் ஐந்தாம் நாடாளுமன்றத் தேர்தல் 1971 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு ஐந்தாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 352 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. இந்திரா காந்தி மூன்றாம் முறையாக பிரதமரானார்.

விரைவான உண்மைகள் மக்களவைக்கான 518 இடங்கள், பதிவு செய்த வாக்காளர்கள் ...
Remove ads

பின்புலம்

இத்தேர்தலில் 518 தொகுதிகளில் இருந்து 518 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கபபட்டனர். இவர்களைத் தவிர இரு ஆங்கிலோ-இந்தியர்களும், வடகிழக்கு பிரதேசத்திலிருந்து (தற்கால அருணாசலப் பிரதேசம்) ஒருவரும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். 1969ல் இந்திய தேசிய காங்கிரசு இரண்டாக பிளவுபட்டது. பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் ஒரு கட்சியும், காமராஜர், நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய் தலைமையில் “நிறுவன காங்கிரசு” அல்லது ஸ்தாபனக் காங்கிரசு என்ற பெயரில் ஒரு கட்சியும் உருவாகின. மக்களவையில் பெரும்பான்மையை இழந்த இந்திரா திமுக, சிபிஎம் ஆகிய கட்சிகளின் வெளி ஆதரவுடன் இரு ஆண்டுகள் பதவியில் நீடித்தார். பதவிக்காலம் முடிய ஓராண்டுக்கு முன்னராகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். கரீபீ ஹடாவோ (வறுமையை ஒழி) என்ற புதிய கோஷத்துடன் அவர் செய்த பிரச்சாரம் மக்களை மிகவும் கவர்ந்தது. இந்திராவின் காங்கிரசு நிறுவன காங்கிரசு தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியை எளிதில் தோற்கடித்து 352 தொகுதிகளில் வென்றது.

Remove ads

முடிவுகள்

மொத்தம் 55.27% வாக்குகள் பதிவாகின

மேலதிகத் தகவல்கள் கூட்டணி, கட்சி ...
Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads