2022 உத்தராகண்ட சட்டப் பேரவைத் தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2022 உத்தராகண்ட சட்டப் பேரவைத் தேர்தல், இந்தியாவின் வடக்கில் உள்ள உத்தராகாண்டம் மாநிலத்தின் சட்டமன்றத்தின் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தல் 14 பிப்ரவரி, 2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் 8 சனவரி, 2022 அன்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 10 மார்ச், 2022 அன்று நடைபெற்றது.
Remove ads
பின்னணி
உத்தரகாண்ட் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 23 மார்ச், 2022 அன்று நிறைவடைகிறது.[1] 2017 உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி, 2017-ஆம் ஆண்டில் நடைபெற்றது. தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் ஆட்சி அமைத்தது.[2]
தேர்தல் அட்டவணை
இந்தியத் தேர்தல் ஆணையம் 8 சனவரி 2022 அன்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.[3]
Remove ads
தேர்தல் முடிவுகள்
10 மார்ச், 2022 அன்று மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாரதிய ஜனதா கட்சி 47 தொகுதிகளையும், இந்திய தேசிய காங்கிரசு 19 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளையும், சுயேட்சைகள் 2 தொகுதிகளையும் கைப்பற்றினர். [4] இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முன்னாள் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வி கண்டனர்.
இருப்பினும் புஷ்கர் சிங் தாமி, உத்தரகாண்ட் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[5]23 மார்ச், 2022 அன்று புஷ்கர் சிங் தாமி இரண்டாவது முறையாக உத்தரகாண்ட் முதலமைச்சராக பதவியேற்றார். [6][7]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads