7-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
7ஆம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 601 தொடக்கம் கிபி 699 வரையான காலப்பகுதியைக் குறிக்கிறது.
Remove ads




632 ஆம் ஆண்டில் முகமதுவின் இறப்பிற்குப் பின்னர் முஸ்லிம்களின் உலக ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது. அராபியக் குடாவுக்கு வெளியே இஸ்லாம் பரவியது. பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றியதை அடுத்து சசானிட் பேரரசு வீழ்ச்சி கண்டது. இந்நூற்றாண்டிலேயே சிரியா, ஆர்மீனியா, எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர்.
கொன்ஸ்டண்டீனப்போல் உலகின் மிகப்பெரியதும், செல்வச் செழிப்பும் கொண்ட நகரமாக இருந்தது. உலகெங்கும் ஜஸ்டீனியக் கொள்ளை நோய் பரவி 100 மில்லியன்களுக்கும் அதிகமானோரைக் கொன்றது. இதனால் ஐரோப்பாவின் மக்கள் தொகை 550-700 ஆம் ஆண்டளவில் 50 விழுக்காடு குறைந்தது[1].
வட இந்தியாவில் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பிளவு பட்டிருந்த பல சிறிய இராச்சியங்களை ஹர்ஷவர்தனர் ஒன்றிணைத்தார். தொண்டை மண்டலத்தில் 575 அளவில் பல்லவரின் ஆட்சியை நிறுவிய சிம்மவிஷ்ணு பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசைச் சேர்ந்த பாண்டியர்களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப் போர்கள் நடந்தன. 7ம் நூற்றாண்டின் காவிரிக் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது.
Remove ads
நிகழ்வுகள்
- இஸ்லாம் அரேபியாவில் பரவியது. திருக்குர்ஆன் ஆவணப்படுத்தப்பட்டது.
- உலக மக்கள் தொகை 208 மில்லியனாகக் குறைந்தது.
- ஆங்கிலோ-சாக்சன் மக்கள் இந்நூற்றாண்டின் முற்பகுதியில் பரவ ஆரம்பித்தனர்.
- சிந்துவில் பௌத்த ஆட்சி முடிவுக்கு வந்தது.
- ஆங்கில கவிதைகள் எழுதப்பட்டன.
- 622, இஸ்லாமிய நாட்காட்டியின் முதலாம் ஆண்டு ஆரம்பம்.
- 632, முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
கண்டுபிடிப்புகள்
குறிப்பிடத்தக்கவர்கள்
- முகமது (570–632), முதலாவது நபி
- பிரம்மகுப்தர், இந்தியக்கணித நிபுணர்
- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
- திருநாவுக்கரசு நாயனார்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads