இந்திராணி பொன்வசந்த்
திராவிட முன்னேற்றக்கழக அரசியல்வாதியும், மதுரை மாநகராட்சியின் 8-ஆவது மன்றத் தலைவர் ஆவார் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திராணி பொன்வசந்த் (Indirani Ponvasanth) திராவிட முன்னேற்றக்கழக அரசியல்வாதியும், மதுரை மாநகராட்சியின் 8-ஆவது மன்றத் தலைவர் ஆவார். இவர் மதுரை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மேயர் ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற மற்றும் மாநகர உள்ளாட்சித் தேர்தல்களில் மதுரையின் 57-ஆவது வார்டில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து மதுரையின் இரண்டாவது மேயரானார்.[1]மதுரை மாநகராட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 67 இடங்களில் வெற்றி பெற்றது. மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் போட்டியிட வேறு வேட்பாளர்கள் யாரும் விண்ணப்பிக்காத நிலையில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான இந்திராணி பொன்வசந்த் போட்டியின்றி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads