இலயோலா மேல்நிலைப் பள்ளி, குப்பையநல்லூர்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் காஞ்சிபுரத்திலுள்ள தனியார் பள்ளி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இலயோலா மேல்நிலைப் பள்ளி, குப்பையநல்லூர் (Loyola Higher Secondary School, Kuppayanallur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குப்பையநல்லூரில் அமைந்துள்ளது. தனியார் கத்தோலிக்க மேல்நிலைப் பள்ளியான இது 1995 ஆம் ஆண்டில் இயேசுயிட்களால் நிறுவப்பட்டது.[2] ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இங்கு கல்வி கற்கிறார்கள்.

விரைவான உண்மைகள் இலயோலா மேல்நிலைப் பள்ளி, குப்பையநல்லூர் Loyola Higher Secondary School, Kuppayanallur, அமைவிடம் ...
Remove ads

வரலாறு

இலயோலா மேல்நிலைப் பள்ளியானது ஓங்கூரில் இருந்த பாரிசு தொடக்கப் பள்ளியிலிருந்து, நடுநிலைப் பள்ளியாகவும், பின்னர் உயர்நிலைப் பள்ளியாகவும், இறுதியாக மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது[3] 59 மாணவர்களின் முதல் தொகுதி 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி 71% தேர்ச்சி பெற்றது, 2007 ஆம் ஆண்டில் இச்சதவீதம் 95.4% ஆக உயர்ந்தது. இப்பள்ளி தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது என்றாலும் நிதி உதவியை பெறவில்லை.[4] இது நான்கு இயேசுசபை சமய குருக்கள் மற்றும் 20 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள தலித் குழந்தைகளின் கல்விக்காக இயேசுசபையால் நடத்தப்படும் ஓர் இரு பாலர் படிக்கும் தமிழ்-நடுத்தரப் பள்ளியாகும்.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads