எச். எச். மகாராணி சேது பார்வதி பாய் நா. சே. ச. மகளிர் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எச் எச் மகாராணி சேது பார்வதி பாய் நா.சே.ச மகளிர் கல்லூரி (நா.சே.ச மகளிர் கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள நீரமங்கராவில் 1951 ஆம் ஆண்டில் நாயர் சேவை சங்கத்தால் நிறுவப்பட்டபழமையான இளங்கலை மற்றும் முதுகலை மகளிர் கல்லூரிகளில் ஒன்றாகும். கேரளா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள[1] இக்கல்லூரியில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
Remove ads
வரலாறு
பாரத கேசரி பூரீ மன்னத்து பத்மநாபன் என்ற நாயர் சமூகத்தின் தலைவரால் ஆரம்பிக்கப்பட்ட நாயர் சேவை சங்கத்தால் (நா.சே.ச) 1951 ஆம் ஆண்டில் பெருந்தண்ணியில் ஒரு இளநிலைக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டதே இக்கல்லூரியாகும். ராதன பழக்க வழக்கங்கள், பாரம்பரியம் ஆகியவற்றின் மீது மூடநம்பிக்கை கொண்டிருந்த நாயர் சமூகத்தை ஊக்குவிப்பதற்கும், அணிதிரட்டுவதற்கும் அவரால் உருவாக்கப்பட்ட இந்த சங்கத்தின் மூலம் தொடங்கப்பட்ட இக்கல்லூரிக்கு கேரளப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் இணை வேந்தராக பணியாற்றிய மகாராணி சேது பார்வதி பாயின் நினைவாகவும், பெருமைப்படுத்தும் விதமாகவும் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.[2]
Remove ads
துறைகள்
அறிவியல் பிரிவு
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம் & புள்ளியியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- வீட்டு அறிவியல்
கலை மற்றும் வணிகப்பிரிவு
அங்கீகாரம்
கேரளப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி, பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
- ஷெர்மி உலகன்னன், 2010 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். (முன்னாள் இந்திய கபடி வீரர்)
- விந்துஜா மேனன், மலையாளத் திரைப்பட நடிகை
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads