என்.டி.ஆர். தோட்டங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
என்டிஆர் தோட்டங்கள் (NTR Gardens ) என்பது ஒரு சிறிய பொது, நகர்ப்புற பூங்காவாகும். இது, இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள உசேன் சாகர் ஏரிக்கு அருகில் 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் பல கட்டங்களில் கட்டப்பட்ட இந்தப் பூங்கா, புவியியல் ரீதியாக நகரின் மையத்தில் அமைந்துள்ளது. மேலும் பிர்லா மந்திர், நெக்லஸ் சாலை மற்றும் லும்பினி பூங்கா போன்ற பிற சுற்றுலா தலங்களுக்கு அருகில் உள்ளது. இது புத்த பூர்ணிமா திட்ட ஆணையத்தால் பராமரிக்கப்படுகிறது. இது தெலங்காணா அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
Remove ads
வரலாறு
ஆரம்பம்

1999இல், ஆந்திராவின் முன்னாள் முதல்வரான என். டி. ராமராவ் நினைவுச்சின்னம் அமைக்க 55 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட்டது. இதை நா. சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். [3] என்.டி.ஆர். பற்றி ஒரு அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதன் மூலம் என்.டி.ஆர் தோட்டங்கள் என்று குறிப்பிடப்பட்ட இந்த பகுதியை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. இந்த நினைவுச்சின்னம் புத்த பூர்ணிமா திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. உசேன் சாகர் ஏரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக அழகுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும்இதை ஐதராபாத் நகர அபிவிருத்தி ஆணையம் கையாள்கிறது.

2000ஆம் ஆண்டில், ஆந்திர அரசு என்.டி.ஆர் தோட்டம், ஒரு பாறைத் தோட்டம் மற்றும் ஐமாக்ஸ் திரையரங்கம் போன்ற பல திட்டங்களுடன் இந்த பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை வெளிப்படுத்தியது. [4] சில நாட்களுக்குப் பிறகு, துபாயைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்களால் ரூ.27 கோடி செலவில் பாறைத் தோட்டம் ஒன்று அமைக்க ஒரு திட்டமிடப்பட்டது. ஐமாக்ஸ் திரையரங்கத் திட்டத்திற்கு ரூ.52 கோடியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களும் நினைவுச்சின்னத்தை வைத்திருந்த அதே 55 ஏக்கர் நிலத்தில் செயல்படுத்தப்பட இருந்தன.[5]
சர்ச்சை

சனவரி 2000இல் இந்தத் தோட்டங்களில் பணிகள் தொடங்கியதும், இரண்டு இலாப நோக்கற்ற அமைப்புகளின் மனு தோட்டங்களில் கட்டுமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரியது. ஏரியைச் சுற்றியுள்ள பகுதியை ஒரு பொழுதுபோக்கு மண்டலமாக விதிமுறைகள் காட்டியுள்ளன. வணிக அல்லது குடியிருப்பு நோக்கங்களுக்காக அனைத்து கட்டுமானங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர். இந்த முன்மொழியப்பட்ட திட்டங்கள் இவை அனைத்தையும் மீறியதாக இருப்பதாக அவர்கள் கூறியதால், இந்தத் திட்டங்களைத் தொடர அனுமதிப்பதற்கு முன்பு அவர்கள் பொது விசாரணை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டை நாடினர். அதன்படி, மேலதிக உத்தரவு வரும் வரை கட்டுமானத்தை நிறுத்துமாறு உள்ளூர் உச்ச நீதிமன்றம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. [6]
1980 ஆம் ஆண்டு ஐதராபாத் நகர அபிவிருத்தி ஆணையத்தின் திட்டத்தின் படி, என்.டி.ஆர் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதி முதலில் ஒரு நீர்நிலையாக இருந்தது. ஆனால் 1994 இல் ஒரு அரசிதழ் அறிவிப்பு அத்தகைய கட்டுமான நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடும் என்று ஒரு ஊடக அறிக்கை பரிந்துரைத்தது. [7]
தற்போது
2001 ஆம் ஆண்டில், இதன் அபிவிருத்தி திட்டங்களுக்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டது. [8] [9] பலவிதமான தாவரங்களைத் தவிர, தோட்டங்களில் ஒரு நினைவு வளாகம், பார்வையாளர்கள் தொடர்வண்டி, உணவகங்கள், ஒரு செயற்கை அருவி ஆகியவையும் உள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads