ஒழிந்தியாம்பட்டு அரசலீசுவரர் கோயில்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒழிந்தியாப்பட்டு அரசலீசுவரர் கோயில் (அரசிலி என்றும் அழைக்கப்படுகிறது) சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1] தொண்டை நாட்டுத்தலங்களில் இது 31வது தலமாகும்.
Remove ads
சிறப்பு
சாளுவ மன்னனால் கட்டப்பட்ட கோயில். பிரதோச வழிபாடு இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது. இத்தலத்தில் வாமேதவ முனிவர் என்பார் வழிபட்டுப் பிரதோச நாளில் பேறுபெற்றார் என்பது தொன்வரலாறு. இங்கு இறைவன் 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின்கீழ் சுயம்புலிங்க வடிவில் சிறிய மூர்த்தியாக இருப்பது சிறப்பாகும்.
அமைவிடம்
இது விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டத்திலுள்ள ஒழிந்தியாம்பட்டில்[2] அமைந்துள்ளது.
அஞ்சல் முகவரி:
- அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில்
- ஒழிந்தியாப் பட்டு - அஞ்சல்
- வானூர் (வழி)
- வானூர் வட்டம்
- விழுப்புரம் மாவட்டம் -605 109
தேவாரப்பாடல்
இத்தலம் குறித்து திருஞான சம்பந்தர் பாடியுள்ள பாடல்:
மிக்க காலனை வீட்டி மெய்கடக் காமனை விழித்துப்
புக்கவூர் இடு பிச்சை உண்பது பொன்திகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந்து ஆமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads