கணேச வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணேச வம்சம் (Ganesha dynasty), கிபி 1414-இல் இராஜா கணேசன் வங்காளத்தில் நிறுவினார். இவ்வம்சத்தவர்களின் தலைநகரமாக கௌட நகரம் இருந்தது. இம்வம்சத்தினர் வங்காளப் பகுதிகளை கிபி 1414 முதல் 1435 முடிய 21 ஆண்டுகள் ஆண்டனர். இவ்வம்சத்தை நிறுவிய முதல் மன்னர் இராஜா கணேசன், இந்து சமயத்தினராக இருப்பினும், இவரது வழித்தோன்றல்கள் இசுலாமியத்திற்கு மாறி வங்காள சுல்தானகத்தை ஆண்டனர்.
Remove ads
வரலாறு
வங்காள சுல்தானகத்தில் குழப்பமான சூழ்நிலை எழுந்த நேரத்தில், இராஜா கணேசன் என்பவர், இசுலாமிய சூபி ஞானி குதுப் அல் ஆலாம் என்வரின் ஆசியுடன், கிபி 1414-இல் இலியாஸ் சாகி வம்சத்தின் வங்காள சுல்தான் முதலாம் அலாவுதீன் பிரூஸ் ஷாவை கொன்று, கணேச வம்சத்தை நிறுவினார். இராஜா கணேசன் தனது மகன் ஜாதுவை, 1415-இல் இசுலாமிய சமயத்திற்கு மாற்றி ஜலாலுத்தீன் முகமது ஷா என பெயர் மாற்றம் செய்வித்து, ஆட்சியை அவனிடம் வழங்கினார்.[1] 1435-இல் கணேசன் வம்சத்தின் மன்னர் சம்சுதீன் அகமது ஷாவை வென்று மீண்டும் இலியாஸ் சாகி வம்சத்தினர் ஆட்சியை நிறுவினர்.
Remove ads
கணேசன் வம்ச ஆட்சியாளர்கள் (1414-1435)
- கணேச வம்சத்தின் முதல மன்னர் இராஜா கணேசன்
 - கணேச வம்சத்தின் இரண்டாம் மன்னர் ஜலாலுதீன் முகமதின் நினைவிடம், கௌட நகரம், மேற்கு வங்காளம்
 - கணேச வம்சத்தின் மூன்றாம் மன்னர் சம்சுதீன் அகமது ஷாவின் பாழடைந்த அரண்மனை, தினஜ்பூர்
 
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads