கண்ணூர்க் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்ணூர்க் கோட்டை என்றறியப்படும் செயிண்ட். ஆஞ்செலோக் கோட்டை கேரள மாநிலத்தின் கண்ணூருக்கு அருகே இருக்கிறது. கண்ணூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அரபிக்கடலோரத்தில் கடலை நோக்கி அமைந்துள்ளது. இக்கோட்டை 1505-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் போர்த்துக்கீசிய வைசிராயால் கட்டப்பட்டது. இக்கோட்டை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஆட்சியாளர்களில் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. 1663-இல் இக்கோட்டை டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்கள் இதனைக் கைப்பற்றி மலபார்ப் பகுதியின் ராணுவ மையமாகப் பயன்படுத்தியுள்ளனர்.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
