கருமண்டபம்
இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஒரு புறநகர் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கருமண்டபம் (Karumandapam) என்பது இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மக்கள் வசிப்பிட மற்றும் வணிகம் நிறைந்த ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
Remove ads
அமைவிடம்
கருமண்டபம் பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 96.15 மீட்டர்கள் (315.5 அடி) உயரத்தில், (10.7886°N 78.6669°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.
நூலகம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் மாவட்ட நூலகத்துறையும் இணைந்து உருவாக்கிய பகுதிநேர நூலகம் ஒன்று கருமண்டபத்தில் இயங்குகிறது.[2]
ஆன்மீகம்
இந்துக் கோயில்
இளங்காட்டு மாரியம்மன் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று கருமண்டபத்தில் கட்டப்பட்டுள்ளது.
மின்சார தகன மையம்
கருமண்டபத்தில் மின்சார தகன மையம் ஒன்று உள்ளது.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads