காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் எனும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். காஞ்சி சர்வதீர்த்தம் தெங்கரையில் உள்ள கிழக்கு பார்த்த சன்னதியான இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது. (இக்கோயில் பற்றிய விபரம் சரிவர தெரியவில்லை.)[1]
Remove ads
வழிப்பட்டோர்
ஈசுவரன் மல்லிகார்சுனர் என்னும் பெயருடன் எழுந்தருளி இருக்கின்றார். இது பல முனிவர்கள் பூசித்து வழிபட்ட தலமாகும்.[2]
அமைவிடம்
இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் காஞ்சி சர்வதீர்த்தம் தென்கரையில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் 1 மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[3]
போக்குவரத்து
- வான்வழி: வானூர்தி சேவை இல்லை; உலங்கு வானூர்தி மூலம் காஞ்சிபுரம் வந்தடைய, காஞ்சியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்திலுள்ள உலங்கூர்தி இறங்குதளத்தில் இறங்கி சீருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.
- இரும்புத் தடம்: தொடருந்து மூலாமாக; தலைநகர் சென்னையிலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகவும், திருப்பதியிலிருந்து அரக்கோணம் மார்க்கமாகவும், காஞ்சி தொடருந்து நிலையத்தை அடைந்து அங்கிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இக்கோயிலை, சீருந்து மூலமாகவும், தானியுந்து மூலமாகவும் சென்றடையலாம்.
- சாலை வழி: பேருந்திலோ, அல்லது சீருந்துலோ, காஞ்சி வந்தடைய நான்கு திசையில் சாலை வழியுள்ளன; வடகிழக்கில், சென்னையிலிருந்து (75 கிலோமீட்டர்) திருப்பெரும்புதூர் வழியாகவும் ; தென்கிழக்கில், செங்கல்பட்டிலிருந்து (40 கிலோமீட்டர்) வாலாசாபாத் வழியாகவும் ; வடமேற்கில், விழுப்புரத்திலிருந்து (80 கிலோமீட்டர்) வந்தவாசி வழியாகவும்; தென்மேற்கில், பெங்களுரிலிருந்து (275 கிலோமீட்டர்) வேலூர் வழியாகவும் இக்கோயில் நகரை வந்தடையலாம்.[4]
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads