குடியரசுத் தலைவர் இல்லம்

அரண்மனை From Wikipedia, the free encyclopedia

குடியரசுத் தலைவர் இல்லம்map
Remove ads

குடியரசுத் தலைவர் இல்லம் (இந்தி: राष्ट्रपति भवन, Rashtrapati bhavan) புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம் ஆகும். இது 19,000 சதுக்க மீட்டர் பரப்பளவு கொண்ட அரண்மனையையும், அதனைச் சுற்றியிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியையும் குறிக்கும். அரண்மனையைச் சுற்றி தோட்டங்கள், அதிகாரிகளின் அலுவலகங்கள், திறந்தவெளிகள் ஆகியன உள்ளன.

விரைவான உண்மைகள் குடியரசுத் தலைவர் இல்லம், பொதுவான தகவல்கள் ...

1911இல் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இந்தியத் தலைநகரத்தை நகர்த்தவேண்டும் என்று பிரித்தானிய அரசு தீர்மானம் செய்ததில், இந்தியத் தலைமை ஆளுநருக்கு புதிய வாழிடம் தேவையானது. இதனால் குடியரசுத் தலைர் இல்லம் உருவாக்கப்பட்டது. செந்நெறிக்காலக் கட்டிடக்கலையில் பிரித்தானிய கட்டிடக்கலைஞர் எட்வின் லூட்டியன்சு வடிவமைப்பில், 1929இல் திறக்கப்பட்டது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads