குந்தலதேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குந்தலதேசம் தசார்ணதேசத்திற்கு வடக்கிலும், சூரசேனதேசத்திற்கு தென்மேற்கிலும், ஆபீரதேசத்திற்கு வடகிழக்கிலும் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்
இந்த குந்தலதேசமானது குரு, சூரசேநம் முதலிய தேசங்களைக் காட்டிலும் கிழக்கு மேற்கில் நீண்டு நீலமுள்ளதாய் இருக்கும். இந்த தேசத்தின் தெற்கு முகமாய் ஓடும் யமுனா நதியின் வெள்ளப் பெருக்கால் பூமிகள் மட்டும் கொஞ்சம் தாழ்ந்து செழித்து இருக்கும்.[2]
பருவ நிலை
இந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் பெய்துகொண்டே இருக்கும்.
மலை, காடு, மிருகங்கள்
இந்த தேசத்தின் நடுவில் ஓடும் யமுனையின் கிழக்குப் பக்கத்தில் கௌரீகிரி என்ற பெரிய மலை உண்டு, மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் யானை, கரடி, புலி முதலிய மிருகங்கள் அதிகமாக இருக்கும். யமுனையின் கிழக்கில் இந்த கௌரீகிரியைச்- சுற்றிலும் உள்ள தேசம் உலூதம் என்பதாகும். இந்த உலூதம் குந்தலதேசத்தின் உபதேசமாகும்.
நதிகள்
இந்த தேசத்தின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் கௌரீகிரி மலைகளிலிருந்தும், பார்கவீ எனகற நதி உண்டாகி குந்தலதேசத்தின் மேற்கு முகமாய் ஓடி, தெற்கு முகமாய் திரும்பி ஜீவ நதியான யமுனையுடன் இணைந்துவிடுகிறது.
விளைபொருள்
இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.
கருவி நூல்
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
சான்றடைவு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
