கே. ஜே. சரசா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. ஜே. சரசா (K.J. Sarasa, இறப்பு: சனவரி 2, 2012) என்பவர் தமிழ்நாட்டின் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியைகளுள் ஒருவரும்,[1] முதலாவது பெண் நட்டுவனாரும் ஆவார்.[2] இவர் பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும், 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுவதும் நடத்தி பரதக் கலையைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகித்தார். சென்னையில் மந்தைவெளியில் சரசாலயா நடனப் பள்ளியை 1960 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தி வந்த இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.[2]
Remove ads
மாணவர்கள்
இவரிடம் நடனம் கற்றுக் கொண்ட பிரபலமானவர்களில் சிலர்.[3]
- முன்னால் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா
- நடிகர் கமல்ஹாசன்
- நடன இயக்குநர் ரகுராம்
- நடிகை சோபனா
விருதுகள்
- கலைமாமணி விருது, 1973-74, வழங்கியது: தமிழ் நாடு அரசு
- சங்கீத நாடக அகாதமி விருது, 1992 வழங்கியது: இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி[4]
- இசைப்பேரறிஞர் விருது, 2004. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[5]
இறப்பு
கே. ஜே. சரசா, சிறிது கால உடல் நலக் குறைவின் பின்னர், தமது 78 ஆவது வயதில் சனவரி 2, 2012 அன்று சென்னையில் காலமானார்[2].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads