கோட்டை (கொழும்பு)
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய வணிக மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோட்டை, கொழும்பு (Fort (Colombo), කොටුව) இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பின் மத்தியில் உள்ள ஒரு வணிக நகரமாகும். இங்கு கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை, கொழும்பு உலக வர்த்தக மையம் ஆகியனவும், இலங்கை வங்கியின் தலைமையகம், இலங்கை மத்திய வங்கிக் கட்டடங்களும் அமைந்துள்ளன. கோட்டைப் பகுதிக் கடற்கரையோரமாக 1859-இல் பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்ட் என்பவரால் கட்டமைக்கப்பட்ட காலிமுகத் திடலும் அதனை ஒட்டிய கடற்கரையும் அமைந்துள்ளது. இப்பகுதியில் தலைமை அஞ்சலகமும் தங்குவிடுதிகளும், பல அரசுத்துறை அலுவலகங்களும் அமைந்துள்ளன.
பிரம்மஞான சபையின் நிறுவனர்களில் ஒருவரான கர்னல் என்றி ஒல்கொட்டின் சிலை கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ளது.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads