சஞ்சல்குடா மத்திய சிறை
இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள ஓர் பழமையான சிறைச்சாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சஞ்சல்குடா மத்திய சிறை (Chanchalguda Central Jail) இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. இந்திய நாட்டின் பழமையான சிறைகளில் சஞ்சல்குடா மத்திய சிறையும் ஒன்றாகும்.[1] ஐதராபாத்தில் உள்ள பழைய நகரமான சஞ்சல்குடாவில் இச்சிறை உள்ளது. ஐதராபாத் நிசாமின் ஆட்சியின் போது தலைமை கட்டிடக் கலைஞர் நவாப் கான் பகதூர் மிர்சா அக்பர் பெய்க் என்பவரால் கட்டப்பட்டது.[2] இன்றும் சிறை செயல்பாட்டில் உள்ளது.
சஞ்சல்குடா சிறைச்சாலையில் 1000 கைதிகளை சிறைவைக்கும் வசதி உள்ளது. ஆனால் சமீபத்தில் 1600 கைதிகளை சிறை வைத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் சராசரியாக 40 புதிய கைதிகள் சிறைக்கு வருகிறார்கள்.[3] 2012 ஆம் ஆண்டில் புனரமைப்பு வசதிகளை மேம்படுத்துதலும் சிறையின் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கின. வயது வந்தோருக்கான கல்வியறிவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, சஞ்சல்குடா மத்திய சிறைச்சாலை 1989-90 வரை 100% கல்வியறிவு விகிதத்தைப் பதிவுசெய்தது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads