சந்திரயான் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரயான் திட்டம் (Chandrayaan programme) அல்லது இந்திய நிலாத் தேட்டத் திட்டம் (Indian Lunar Exploration Programme) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இசுரோ) மேற்கொண்டுவரும் விண்வெளித் திட்டமாகும். இத்திட்டத்தில் நிலா வட்டணைக்கலம், மோதல் கலம், மென்தரையிறங்கி, நிலா ஊர்கலம்(ஊர்தி) ஆகியன அடங்கும்.
Remove ads
திட்ட அமைப்பு
சந்திரயான் என்ற இந்திய நிலா ஆய்வுத் திட்டம் பல பணிகளைக் கொண்ட திட்டமாகும். 2019 செப்டம்பர் நிலவரப்படி, இசுரோவின் பிஎஸ்எல்வி ஏவூர்தியைப் பயன்படுத்தி, ஒரு மொத்துகல ஆய்வுக் கருவியுடன் ஒரு சுற்றுக்கலமும் நிலாவுக்கு அனுப்பப்பட்டது. சுற்றுக்கலம், மென்தரையிறங்கி, நிலா ஊர்தி ஆகியவற்றைக் கொண்ட இரண்டாவது விண்கலம் 2019 சூலை 22 அன்று எல்.வி.எம்-3 ஏவூர்தியைப் பயன்படுத்தி ஏவப்பட்டது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் எசு. சோமநாத், சந்திரயான் திட்டத்தில் சந்திரயான்-3 மற்றும் பல தொடர் பணிகள் இருக்கும் என்று கூறினார்.[2] சந்திரயான்-3 பணி 2023 சூலை 14 இல் எல்விஎம்-3 ஐப் பயன்படுத்தி ஏவப்பட்டது, இது 2023 ஆகத்து மாதத்தில் அது நிலவின் மேற்பரப்பை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Remove ads
கட்டம்-1
காண்க, சந்திரயான்-1
கட்டம்-2
காண்க, சந்திரயான்-2
கட்டம்-3
காண்க, சந்திரயான்-3
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads