சுசில் பிரேமஜயந்த

சிறீலங்கா அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சுசில் பிரேமஜயந்த
Remove ads

ஏ. டி. சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha, பிறப்பு: சனவரி 10 1955), இலங்கை அரசியல்வாதி. இவர் 1993இல் மேல் மாகாண சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டு 1995இல் மேல் மாகாண முதலமைச்சரானார்.[1] இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பெற்றோலியத் துறை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][3] [4]

விரைவான உண்மைகள் மாண்புமிகுசுசில் பிரேமஜயந்தநா.உ., அவைத் தலைவர் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

123/1, புகையிரத வீதி, கங்கொடவில, நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட.

உசாத்துணை

குறிப்புகள்

  1. 21 செப்டம்பர் 2015 அன்று, இலாகா தொழில்நுட்பம், தொழில்நுட்பக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரிடமிருந்து மாற்றப்பட்டது, ஆனால் இன்னும் அமைச்சகம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads