தண்ணீர்பாவி மரப் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தண்ணீர்பாவி மரப் பூங்கா (Tannirbavi Tree Park) என்பது இந்தியாவின்[1] கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு நகரில் இருக்கும் ஒரு பூங்காவாகும். இப்பூங்கா இரண்டு பகுதிகளாக பரவியுள்ளது. ஒன்பது ஏக்கர் பரப்பளவுடன் குருபுரா ஆற்றங்கரையில் ஒன்றும், மற்றொன்று 22.5 ஏக்கர் பரப்பளவில் கடற்கரை ஓரத்திலும் பரவியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து பெறப்பட்ட பல்வேறு வகையான தாவர இனங்களும், மூலிகைத் தாவரங்களும் உள்ளன.[2] பூங்காவில் குழந்தைகள் பகுதி உணவு அரங்கம், கலாச்சாரப் பகுதி, கடற்கரை தகவல் மையம் , கைப்பந்து மைதானம் மற்றும் வெளிப்புறத் தோட்டத்துடன் கூடிய கடற்கரையோர ஓய்வுப் பகுதி போன்ற வசதிகளும் உள்ளன.
- பூங்காவில் இசை நிகழ்ச்சிகள் நடக்கும் இடம்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads