தம்பையா ஏகாம்பரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தம்பையா ஏகாம்பரம் (Thambiah Ehambaram, 12 அக்டோபர் 1913.[1] – 22 மார்ச் 1961) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், திருகோணமலை நகரசபைத் தலைவரும் ஆவார்.[2]

விரைவான உண்மைகள் ரி. ஏகாம்பரம்T. Ehambaramநா.உ., இலங்கை நாடாளுமன்றம் மூதூர் ...

திருகோணமலை நகரசபையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உறுப்பினராகப் பணியாற்றிய ஏகாம்பரம் பல ஆண்டுகள் நகரசபைத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் இரட்டை-உறுப்பினர் தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அத்தொகுதியின் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[3] சூலை 1960 தேர்தலில் இவர் மீண்டும் முதலாவது உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4] இவர் பதவியில் இருக்கும் போதே 1961 மார்ச் 22 இல் காலமானார்.[5]

Remove ads

தேர்தல் வரலாறு

மேலதிகத் தகவல்கள் தேர்தல், தொகுதி ...

மறைவு

1961 மார்ச் 22 அன்று திருகோணமலை கச்சேரி வாயிலில் நடைபெற்ற சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய ஏகாம்பரம் அவரது வீட்டிலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுத் தனது 47-வது அகவையில் காலமானார்.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads