தாயின் மடியில்
அதுர்த்தி சுப்பா ராவ் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாயின் மடியில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அதுர்த்தி சுப்பா ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 18 திசம்பர் 1964 அன்று வெளியானது.[1][2]
Remove ads
கதை
குதிரை ஏற்ற வீரரான ராஜா ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரும் தொழிலதிபர் பூபதி மகளும் காதலிக்கின்றனர். அநாதையாக அரிந்த ராஜா பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் தாயைப் பற்றியும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் அறிந்துகொள்கிறார். தன் தாயிக்கு அநீதி இழைத்த தன் தந்தையை கண்டுபிடித்து பழிவாக்குவராக ராஜா சபதம் செய்கிறார். இறந்துவிட்டதாக கருதிய தன் தாயை ராஜா சந்தித்து மகிழ்கிறார். ஆனால் தந்தை பூபதிதான் என தன் தாயின் மூலமாக அறியும்போது அவர் அதிர்ச்சியடைகிறார்.
Remove ads
நடிப்பு
திரைக்கலஞ்சியம் பகுதி-2 என்ற நூலைத் தழுவி எடுக்கப்பட்ட பட்டியல்.[3]
|
|
தயாரிப்பு
இப்படத்தை அன்னை பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் கே. ஆர் பாலன் தயாரித்தார். படத்தை ஏ. சுப்பாராவ் இயக்கினார். ஆர். ஆர். சந்திரன் ஒளிப்பதிவு செய்தார். இப்படத்திற்கான கதை, உரையாடலை சொர்ணம் எழுதினார்.[4]
பாடல்
இப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைக்க, படல் வரிகளை கண்ணதாசன், வாலி ஆகியோர் எழுதினர்.[5] "இராஜாத்தி காத்திருந்தாள்" பாடலுக்கு ம. கோ. இராவும், சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடினார்கள். அது இரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
Remove ads
வெளியீடு
இப்படம் 18 திசம்பர் 1964 அன்று வெளியானது. ஆனால் இது வெளியான 26 நாட்களிலேயே ம. கோ. இரா நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படமும் வெளியானதால் அது இப்படத்தின் வெற்றியை பாதிப்பதாக ஆனது.[6]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

